கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சாவு


கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 17 May 2021 7:29 PM GMT (Updated: 17 May 2021 7:29 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி இறந்தார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த 84 வயது மூதாட்டி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வாரியங்காவல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விதிமுறைகளை கடைபிடித்து அடக்கம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story