ரத்த பரிசோதனை முகாம்
ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்
கரூர் மாவட்டம் அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் வகையில் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் கிராம சுகாதார செவிலியர் ஜீவா, சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்கள் ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடலில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் சத்து மாத்திரைகள், மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story