டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு


டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 May 2021 8:16 PM GMT (Updated: 19 May 2021 8:16 PM GMT)

டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

சிவகங்கை
அரசு உத்தரவை மீறி, சிவகங்கை நகர் பகுதிகளில் ஏராளமானவர்கள் பகல் 10 மணிக்கு மேல் வாகனங்களில் தேவையின்றி சுற்றி திரிகின்றனர். இவர்களை போலீசார் பலமுறை எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் பலர் வீதிகளில் காரணம் இல்லாமல் திரிந்தனர். இதனால் போலீசார், நகரில் உள்ள செட்டிஊரணிகரை வீதி, காந்தி வீதி மற்றும் அரண்மனை வாசல் உள்ளிட்ட அனைத்து முக்கிய வீதிகளையும் தடுப்பு கம்பிகளை கொண்டு வாகனங்கள் செல்ல முடியாதபடி அடைத்தனர். அத்துடன் வாகன நடமாட்டத்தை கண்காணிக்க சிவகங்கை நகர் முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் டிரோன் கேமரா கொண்டு கண்காணித்தனர்.

Next Story