கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்


கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
x
தினத்தந்தி 19 May 2021 9:53 PM GMT (Updated: 19 May 2021 9:53 PM GMT)

கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.

கோபி பெரியார் திடலில் தற்காலிகமாக தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு காய்கறிகள் வாங்குவதாக ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதனால் நோய்  தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில் கோபி பஸ் நிலையத்துக்கு தினசரி காய்கறி மார்க்கெட் 19-ந் தேதி (நேற்று) முதல் மாற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் முகக்கவசம் அணிந்து கண்டிப்பாக வரவேண்டும் எனவும் கூறினர்.

Next Story