அரூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது


அரூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 May 2021 12:08 AM GMT (Updated: 20 May 2021 12:57 AM GMT)

அரூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரூர்,

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையிலான போலீசார் நேற்று கோட்டப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த சின்னராஜ் (வயது 39), தேக்கனம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 21 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story