மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 20 May 2021 2:31 PM GMT (Updated: 20 May 2021 2:31 PM GMT)

மது விற்றவர் கைது

இடிகரை

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டு உள்ளன. 

இந்த நிலையில் கோவை இடையர்பாளையம் கே.கே. நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, நாகராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். 

இதில் அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த கரூர் மாவட்டம் வீரகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1750 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story