விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு


விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 20 May 2021 8:19 PM GMT (Updated: 20 May 2021 8:19 PM GMT)

பாவூர்சத்திரத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பாவூர்சத்திரம், மே:
குற்றாலம் வேலம்மாள் தெருவில் வசித்து வருபவர் செய்யது பசீர். மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி ஹசினா பானு (வயது 44). கடந்த 14-ந் தேதி கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தனர். பின்னர் அங்கு இருந்து மாலையில் குற்றாலம் திரும்பினார்கள். பாவூர்சத்திரம் வரும் போது, அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஹசினா பானு கீழே விழுந்து காயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஹசினா பானு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story