வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பெண்கள் மீது வழக்கு


வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பெண்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 May 2021 8:24 PM GMT (Updated: 20 May 2021 8:24 PM GMT)

வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு வெள்ளாற்றில் மணல் அள்ளி, சாக்குகளில் மூட்டைகளாக கட்டி தள்ளுவண்டியில் வைத்து 4 பெண்கள் கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லெப்பைக்குடிக்காடு கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், தள்ளுவண்டியை பிடித்து, அந்த பெண்களிடம் விசாரித்தார். இதில் அவர்கள், பென்னகோணத்தை சேர்ந்த நித்யா (வயது 32), அஞ்சலை (45), சுவிதா (33), மற்றொரு அஞ்சலை (56) என்பதும், அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து அவர், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story