செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,092 பேர் பாதிப்பு 44 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,092 பேர் பாதிப்பு 44 பேர் சாவு
x
தினத்தந்தி 21 May 2021 3:31 AM GMT (Updated: 21 May 2021 3:31 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,092 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 44 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,092 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 369-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 5734 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1395-ஆக உயர்ந்தது. இதில் 15,240 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 858 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 373-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 764 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 27 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775- ஆக உயர்ந்துள்ளது. 6834 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story