பெண்ணிற்கு கொலை மிரட்டல்


பெண்ணிற்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 May 2021 8:25 PM GMT (Updated: 21 May 2021 8:25 PM GMT)

பெண்ணிற்கு கொலை மிரட்டல்

மதுரை
மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரீகன். இவரது மனைவி தீபா (வயது 38). சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் ஜன்னல் வழியாக பின்புறம் உள்ள வீட்டின் மாடியில் இருந்து வாலிபர்கள் 4 பேர் பார்த்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அவர் கேட்ட போது தீபாவை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story