புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை


புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 22 May 2021 5:44 PM GMT (Updated: 22 May 2021 5:44 PM GMT)

புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. கூலித்தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 21). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story