கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2021 3:56 PM GMT (Updated: 23 May 2021 3:56 PM GMT)

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ராஜீவ்நகர் 9-வது தெருவில், சின்னத்துரை (வயது 20), இளங்கோ (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Next Story