தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2021 4:48 PM GMT (Updated: 23 May 2021 4:48 PM GMT)

நாகையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.

நாகப்பட்டினம்:
நாகையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்கில் தொங்கினார்
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் ரேவதி (வயது 30). இவருக்கும் நாகை மறைமலைநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரேவதி வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
உதவி கலெக்டர் விசாரணை
இந்த நிலையில் ரேவதியின் பெற்றோர், வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகள் வரதட்சணை கொடுமை காரணமாக   தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story