மாவட்டத்தி்ல் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தி்ல் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 May 2021 6:24 PM GMT (Updated: 25 May 2021 6:24 PM GMT)

புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 269 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 901 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 3 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 192 ஆக உள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Next Story