கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 330 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி நேற்று மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 151 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 2,561 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 330 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி நேற்று மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 151 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 2,561 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story