மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 May 2021 7:09 PM GMT (Updated: 27 May 2021 7:09 PM GMT)

மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விழுதுடையான் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரஜினி (வயது 40). கூலித்தொழிலாளியான இவர், தனது ஆட்டுக்குட்டிக்கு கொடுப்பதற்காக சம்பவத்தன்று ஓலையூர் ரோட்டில் உள்ள ஆலமரத்தில் ஏறி தழை வெட்டினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மனோரஞ்சிதம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story