கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி மேலும் 613 பேருக்கு தொற்று உறுதி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி மேலும் 613 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 May 2021 8:13 PM GMT (Updated: 27 May 2021 8:13 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

613 பேர் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 45 ஆயிரத்து 524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 37 ஆயிரத்து 513 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 462 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 613 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 55 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 554 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

10 பேர் பலி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டையை சேர்ந்த 41 வயது நபர் மற்றும் 59 வயது முதியவர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 46 வயது பெண், பண்ருட்டியை சேர்ந்த 47 வயது பெண், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 67 வயது முதியவர் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 64 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 64 வயது நபர், சிதம்பரத்தை சேர்ந்த 64 வயது நபர், மங்களூரை சேர்ந்த 50 வயது நபர் ஆகியோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 51 வயது நபர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இவர்கள் 10 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் மாவட்டத்தில் 570 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

Next Story