திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 29 May 2021 3:54 PM GMT (Updated: 29 May 2021 3:54 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நேற்று 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 4430 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்று மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 5,067 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Next Story