விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2021 5:11 PM GMT (Updated: 30 May 2021 5:11 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். மேலும் 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 239 பேர் சிகிச்சை பலனின்றி இறந்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 619 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. 

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 73 வயது முதியவர், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 30 வயது ஆண், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரக்காணத்தை சேர்ந்த 55 வயது ஆண், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 55 வயது பெண், விழுப்புரத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, விழுப்புரத்தை சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 592 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

Next Story