புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 May 2021 6:41 PM GMT (Updated: 30 May 2021 6:41 PM GMT)

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாளப்பட்டி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்த மாரியப்பன் (வயது 40) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story