செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,194 பேர் பாதிப்பு 37 பேர் உயிரிழந்தனர்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,194 பேர் பாதிப்பு 37 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 31 May 2021 5:17 AM GMT (Updated: 31 May 2021 5:17 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,194 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 37 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1789- ஆக உயர்ந்தது. இதில் 11493 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 912- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 948-ஆக உயர்ந்துள்ளது. 6,614 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story