இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 31 May 2021 5:41 AM GMT (Updated: 31 May 2021 5:41 AM GMT)

இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 887 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 90 ஆயிரத்து 421 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 691 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,363 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 18 பேர் இறந்து உள்ளனர்.

Next Story