கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள்


கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள்
x
தினத்தந்தி 31 May 2021 5:47 PM GMT (Updated: 31 May 2021 5:47 PM GMT)

கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது

நொய்யல்
கரூர் மாவட்டம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறையினர் புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருக்கள், வீதிகள், சாலைகள் உள்ளிட்டவைகளை தடுப்புகள் மூலம் அடைத்து வைத்துள்ளனர். அந்த வழியாக யாரும் செல்லாதபடி போக்குவரத்துக்கு தடை விதித்து, அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். புகளூர் பகுதியில் தினமும் கொரோனா தொற்றும் மற்றும் இறப்பு அதிகம் ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story