கொரோனா ஊரடங்கில் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு பாராட்டு


கொரோனா ஊரடங்கில் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 31 May 2021 6:00 PM GMT (Updated: 31 May 2021 6:00 PM GMT)

கொரோனா ஊரடங்கில் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் கொரோனா ஊரடங்கில் சோதனை சாவடி அமைத்து சிறப்பாக பணிபுரியும் போலீசார் மற்றும் ஊர்காவல் படை ஊழியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் நடைபெற்றது. இதில் கரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ்ஜெயகுமார், டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை ஊழியர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.


Next Story