மரக்கன்றுகளை நட்ட இளைஞர்கள்


மரக்கன்றுகளை நட்ட இளைஞர்கள்
x
தினத்தந்தி 31 May 2021 7:06 PM GMT (Updated: 31 May 2021 7:06 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

வத்திராயிருப்பு, 
 வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.ராமச்சந்திரபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியை பசுமையாக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர். அதன்படி இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள், பஜார் பகுதி, பள்ளி வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அத்துடன் ஊராட்சி பகுதிகளில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர். 

Next Story