கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி?


கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி?
x
தினத்தந்தி 31 May 2021 8:04 PM GMT (Updated: 31 May 2021 8:04 PM GMT)

கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், இதேபோல் 44 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் தான் உயிரிழந்தார்களா? என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு இன்னும் வரவில்லை. ஏற்கனவே குன்னத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், லப்பைக்குடிகாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story