கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி


கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 8:04 PM GMT (Updated: 31 May 2021 8:04 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 259 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

259 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 106 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 64 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 59 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 30 பேரும் என மொத்தம் 259 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 8,465 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு இம்மானுவேல் நகரை சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு மருத்துவர் காலனியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 2,748 பேர்
மருத்துவமனைகளில் 5,660 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,748 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,468 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 533 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 284 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 817 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக கோவிஷீல்டு தடுப்பூசி 690-ம், கோவேக்சின் தடுப்பூசி 1,070-ம், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக கோவேக்சின் தடுப்பூசி 660-ம் கையிருப்பில் உள்ளது.

Next Story