கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி


கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 9:02 PM GMT (Updated: 31 May 2021 9:02 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 392 பேர் இறந்தனர். 

இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், 56 வயது பெண், நத்தத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் 64 வயது மூதாட்டி, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஆகிய 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தனர். 

இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று புதிதாக 323 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ் ஏட்டு மற்றும் 137 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.


 இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்து 984 ஆக அதிகரித்தது. 

அதேநேரம் 221 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story