ஏற்காடு போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி


ஏற்காடு போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 31 May 2021 9:59 PM GMT (Updated: 31 May 2021 9:59 PM GMT)

ஏற்காடு போலீஸ் ஏட்டு கொரோனாவுக்கு பலியானார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. ஏற்காடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த நிர்மல்குமார் (வயது 42) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மல்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

Next Story