வாழப்பாடி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை


வாழப்பாடி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 31 May 2021 11:47 PM GMT (Updated: 31 May 2021 11:47 PM GMT)

வாழப்பாடி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வாழப்பாடி:
வாழப்பாடி அருகே திருமணம் ஆன 7 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டதாரி பெண்
வாழப்பாடி அருகே உள்ள ரங்கனூரை சேர்ந்தவர் பெரமன் (வயது 25). விவசாயி. இவருடைய மனைவி ஷாலினி (22). கணினி துறையில் பட்டம் முடித்துள்ளார். ஷாலினிக்கும், பெரமனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஷாலினியை அவரது மாமியார், மாமனார் ஆடு, மாடு மேய்க்கவும், விவசாய  பணிகளை செய்யவும் கூறியதாக தெரிகிறது. 
ஆனால் பட்டதாரியான ஷாலினிக்கு விவசாய பணியில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லாததால், மாமனார், மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால், மனமுடைந்த ஷாலினி, நேற்று முன்தினம் இரவு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.
வழக்குப்பதிவு
இது குறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார்  மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஷாலினிக்கு திருமணமாகி 7 மாதமே ஆவதால் சேலம் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story