குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2021 4:49 PM GMT (Updated: 2 Jun 2021 4:49 PM GMT)

சாக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் ஆழமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 80). இவர் வீட்டை விட்டு வெளியேறி சில ஆண்டுகளாக சாக்கோட்டை பகுதியிலேயே தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சுப்பனின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story