கொரோனா பரிசோதனை முகாம்


கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 2 Jun 2021 6:37 PM GMT (Updated: 2 Jun 2021 6:37 PM GMT)

கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

லாலாபேட்டை
லாலாபேட்டை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி தலைமை தாங்கினார்.  இதில் கள்ளப்பள்ளி, கொடிக்கால் தெரு, லாலாபேட்டை, செட்டியார் தெரு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில், கள்ளப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி, மருத்துவக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story