மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அரும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த தனபால் மகன் பன்னீர்செல்வம்(வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மூலக்காடு பகுதியில் சாராயம் விற்பனை செய்த வீரமணி மகன் குருமூர்த்தி(27) என்பவரை வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கைது செய்து அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story