வடகாடு அருகே சாராயம் விற்றவர் கைது


வடகாடு அருகே சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2021 8:50 PM GMT (Updated: 3 Jun 2021 8:50 PM GMT)

வடகாடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்

வடகாடு
வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் ஒரு கடையின் பின்புறம் சாராயம் விற்கப்படுவதாக வடகாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் வடகாடு தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சின்னத்துரை என்பவரது கடையின் பின்புறம், பாட்டில்களில் நிரப்பி சாராயம் விற்றுக் கொண்டிருந்த  அனவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்து தப்பி சென்ற அனவயல் கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். தேடப்படும் சின்னத்துரை அனவயல் எல்.என்.புரம்  ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story