2,810 பேருக்கு கொரோனா 31 பேர் பலி


2,810 பேருக்கு கொரோனா  31 பேர் பலி
x
2,810 பேருக்கு கொரோனா 31 பேர் பலி
தினத்தந்தி 4 Jun 2021 4:56 PM GMT (Updated: 4 Jun 2021 4:56 PM GMT)

2,810 பேருக்கு கொரோனா 31 பேர் பலி

கோவை, ஜூன் .5-

கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 810 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 708-ஆக உயர்ந்தது. 

இதுவரை இல்லாத அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4,590 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 589-ஆக உள்ளது.


மேலும், கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 35 ஆயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,425-ஆக உயர்ந்தது.

கோவை பன்னிமடையை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் பொன்னுசாமி (வயது 48). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

உடனே அவரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Next Story