ஓடையில் மணல் திருடிய 4 பேர் கைது; 8 பேருக்கு வலைவீச்சு


ஓடையில் மணல் திருடிய 4 பேர் கைது; 8 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jun 2021 4:55 PM GMT (Updated: 5 Jun 2021 4:55 PM GMT)

சாயர்புரம் அருகே ஓடையில் மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாயர்புரம், ஜூன்:
சாயர்புரம் அருகே நட்டாத்தியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிந்தா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த ஒரு கும்பல் மினி வேனில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர்.
4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வல்லநாடு அருகே உள்ள கலியாவூரை சேர்ந்த சண்முகதுரை மகன் சின்னத்திரை (வயது 21), தங்கராசு மகன் தங்கமுத்து (22), வேலு மகன் கல்யாணசுந்தரம் (23), முருகன் மகன் கோபால் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினிவேனில் தப்பிச் சென்ற 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story