தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2021 6:21 PM GMT (Updated: 7 Jun 2021 6:21 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 298 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,906 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 354 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 298 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,847 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 148 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Next Story