சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
வெம்பக்கோட்டையில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 33) என்பவர் சாராயம் காய்ச்சுவதாகவும், அதனை விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாராய பேரல்களை கீழே கொட்டி அளித்ததுடன், ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story