மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு


மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 Jun 2021 8:23 PM GMT (Updated: 7 Jun 2021 8:23 PM GMT)

வாசுதேவநல்லூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

வாசுதேவநல்லூர், ஜூன்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள டி.ராமநாதபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 51). கூலித்தொழிலாளி. இவர் ராமநாதபுரம் மங்கம்மா சாலையில் பிள்ளையார் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். புளிய மரத்தில் ஏறிய குணசேகரன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த குணசேகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே குணசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story