குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


குலசேகரன்பட்டினத்தில்  கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Jun 2021 4:12 PM GMT (Updated: 8 Jun 2021 4:12 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் தேங்காய், பழக்கடை வைத்துள்ளார்.

இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த பியூலா (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது பியூலா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையினால் பியூலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து பியூலாவின் தாய் வினோலியா அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story