புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 7:18 AM GMT (Updated: 9 Jun 2021 7:18 AM GMT)

புதுச்சேரியில் தற்போது 6,853 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 642 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரி - 496, காரைக்கால் - 110, ஏனாம் - 22, மாஹே - 14  என மொத்தம் 642 (7.54 சதவீதம்) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 748 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. தற்போது புதுச்சேரியில் மொத்தம் 6,853 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 02 ஆயிரத்து 247 (92.32 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 542 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story