சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை


சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2021 6:19 PM GMT (Updated: 9 Jun 2021 6:19 PM GMT)

சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளான். இந்த காதலுக்கு சிறுவனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். 
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story