திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 6:24 PM GMT (Updated: 9 Jun 2021 6:24 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண், 64 வயது முதியவர், 70 வயது மூதாட்டி, 72 வயது முதியவர் மற்றும் 83 வயது மூதாட்டி ஆகிய 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா இறந்தவர்களின் எண்ணிக்கை 483ஆக உயர்ந்தது. 
இதற்கிடையே 38 பெண்கள் உள்பட மேலும் 223 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்து 520 ஆக உயர்ந்தது. அதேநேரம் 371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 47 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story