சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பொறுப்பேற்பு


சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 8:53 PM GMT (Updated: 9 Jun 2021 8:53 PM GMT)

சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பொறுப்பேற்றார்

சேலம்:
சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றிய சந்திரசேகரன் வேலூர் சிறப்பு காவல்படை கமாண்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேற்கு மண்டலத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய மோகன்ராஜ், சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மோகன்ராஜ் சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் மாமாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் துணை கமிஷனர் மோகன்ராஜை போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story