மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 5:43 PM GMT (Updated: 10 Jun 2021 5:43 PM GMT)

மானாமதுரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே பி.ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் பாரத்துடன் வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்வது ெதரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்குறிச்சி ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திக், பரமக்குடியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


Next Story