திருப்பத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் சிங்கம்புணரி சாலை அக்னி பஜார் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூர் கிளை தலைவர் யாசர் அராபத், நகர தலைவர் யாசின் மற்றும் திருப்புத்தூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பின