கொரோனாவுக்கு 8 பேர் பலி


கொரோனாவுக்கு 8 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 6:45 PM GMT (Updated: 10 Jun 2021 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். மேலும் தொற்று பாதிப்பு 24 ஆயிரத்தை கடந்தது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 23 ஆயிரத்து 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்து 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 161 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண், 62 வயது பெண், 56 வயது பெண், 85 வயது மூதாட்டி, 67 வயது ஆண், 65 வயது ஆண், 83 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

276 பேருக்கு தொற்று

 அதேபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161-ல் இருந்து 169 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 1400 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story