பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:42 PM GMT (Updated: 10 Jun 2021 7:42 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரில் பீடித்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பீடித்தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  
ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், பீடித்தொழிலாளர்கள் சங்க தலைவர் சாந்தி, ஒன்றிய செயலாளர் ஆரியமுல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story