சேலம் மாநகர குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பேற்பு


சேலம் மாநகர குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 9:29 PM GMT (Updated: 10 Jun 2021 9:29 PM GMT)

சேலம் மாநகர குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பேற்றார்

சேலம்:
சேலம் மாநகர குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றிய மூர்த்தி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு மாற்றப்பட்டார். இதேபோல் திருச்சி மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றிய வேதரத்தினம் சேலம் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று சேலம் மாநகர குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனராக வேதரத்தினம் பொறுப்பேற்றார். பின்னர் அவரை போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சேலத்தில் குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று துணை கமிஷனர் வேதரத்தினம் தெரிவித்தார்.

Next Story