பனைமரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுமா


பனைமரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுமா
x
தினத்தந்தி 11 Jun 2021 6:01 PM GMT (Updated: 11 Jun 2021 6:01 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் பனைமரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் பனைமரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
பனைமரங்கள்
கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடி பனைமரங்கள் இருந்தன. தற்போது தமிழ்நாட்டில் 2½ கோடி பனைமரங்கள் மட்டுமே உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் வீசியபோது பல்வே
று மரங்கள் சாய்ந்தன. ஆனால் புயலை தாக்குப்பிடித்த ஒரே மரம் பனைமரம். மேலும் பனைமரம் நிலத்தடி நீரை கீழே செல்லவிடாமல் பாதுகாக்கும். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் கிழங்கு, நுங்கு, பதனீர் அனைத்தும் உடலுக்கு நன்மை தர கூடியதாகும். மேலும்  பனை வெல்லத்தில் செய்யப்படும் கருப்பட்டி இரும்புசத்தும், பதனீரில்  கால்சியம் சத்தும் உள்ளது.   ஆனால் சிலர் பனைமரத்தை பல்வேறு காரணத்திற்காக வெட்டி விற்பதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. 
நடவடிக்கை  
திருத்துறைப்பூண்டி பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் வெளியூரில் உள்ள தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காக இங்குள்ள பனை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு பயன்களை தரும் பனை மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துறைப்பூண்டியில் பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பனை மரங்களை வெட்டி விற்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story